Friday, September 25, 2009

சூப்பர் ஸ்டார் செல்லும் பாபா குகையை நோக்கி பயணம்....

சூப்பர் ஸ்டார் செல்லும் பாபா குகையை நோக்கி பயணம்....


















அறிந்தோ, அறியாமலோ விஜய் டி.வி-யினர் சூப்பர் ஸ்டாரின் மகுடத்திலே மேலும் ஒரு வைரக்கல்லை சேர்த்துவிட்டனர்.

ஆம். பாபா திரைப்படம் வெளியான சமயத்தில் எத்தனை நபர்கள் எள்ளி நகையாடினர். தலைவரிடமிருந்து அதிரடியை எதிர்ப்பார்த்த நம் சக ரசிகர்களிடத்திலே கூட ஒரு சிறு மன வருத்தம். இதற்கும் மேலே ரசிகர்கள் என்ற போர்வையில் அந்த சரித்திர திரைக்காவியத்தை விமர்சனம் என்ற பெயரிலும், தன் அனுபவம் என்ற பெயரிலும் புழுதி வாரி தூற்றியதும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. பாவம், அப்படி எள்ளி நகையாடியவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும் அக்காவியத்தின் உள் அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்று விமர்சித்த அந்த உள்ளங்களே இன்று இந்த நிகழ்ச்சியை காண குடும்ப சகிதமாய் அமர்ந்து, முக்கிய வேலைகளையும் ஏன் தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்து கண்டு ரசிக்கிறார்கள் என்றால் மிகையாகது.

அக்காவியத்தில் கூறப்பட்ட பல விவரங்கள் (அட! ஒவ்வொறு சீன்களிலும் ஒரு விவரம் இருக்குங்க) வேறு எந்த திரைப்படத்திற்கும் பொறுந்தக்கூடிய விஷயமல்ல. அப்படி ஒரு தகவல்களை போகிற போக்கில் அள்ளி தெரித்து இருப்பார் நமது சூப்பர் ஸ்டார்.

உதாரணமாக, நாம் அன்றாட வாழ்வில் செய்யும் பல செயல்களில் ஆசனங்கள் (யோகசனம்) இருக்கு என்பதை விவரித்து இருப்பார். கஷ்டப்பட்டு செய்யும் உடற்பயிற்சி காட்டிலும் இஷ்டப்பட்டு செய்யும் யோகசனத்தின் பலன் மிக பெரியது என்று சொல்லாமல் சொல்லி இருப்பார் தலைவர். தியானத்தின் மகத்துவத்தையும் இமயமலையில் மஹாஅவதார் பாபாஜி அவர்கள் தோன்றும் காட்சியில் அழகாக உணர்த்தி இருப்பார்.

குறிப்பாக, அவர் உபயோகிக்கும் க்ரியா யோக முத்திரை. அம்முத்திரையை பற்றி அழமான விவரங்களை வெளியிடாவிட்டாலும், சாமான்ய மக்களும் பாபா முத்திரையை அறிய வைத்தார். முத்திரைகளில் பல வகை உண்டு. அவற்றில் உச்ச பலனை கொடுக்கும் முத்திரைகளுள் ஒன்று தான் நாம் பார்த்து ரசித்த அந்த பாபா முத்திரை.

திரைப்படத்தை விடுங்கள். சூப்பர் ஸ்டார் எந்த மேடையில் வீற்றிருந்தாலும், அவர் கை விரல்களை பார்த்தோமே ஆனால் ஏதாவது ஒரு முத்திரையை பிடித்து இருப்பார். அப்படி என்ன விஷேசம் அந்த முத்திரைகளில். பலருக்கு தெரிந்த விவரமே என்றாலும் ஒரு நினைவூட்டலே இந்த பதிவு.

சரி, முத்திரை என்றால் என்ன?
நம் ஐந்து விரல்களும் பஞ்ச பூதங்களை குறிக்கும். அவற்றை ஒன்றோடு ஒன்றை இணைப்பதன் மூலம் நம் புற உடம்பையும், அக ஆன்மாவையும் எந்த தீதும் நெறுங்காவண்ணம் தடுக்க முடியும். அவ்வாறு விரல்களை முறையாக இணைக்கும் விதம் தான் முத்திரை என்பது.

நாட்டியங்களில் கூட எண்ணங்களை நடனங்களில் எடுத்து கூற உதவுவது முத்திரையே. அப்படி தான் நம் உடல் ஆரோக்கிய தேவைகளையும், ஆன்ம ஆரோக்கிய தேவைகளையும் பூர்த்தி செய்வது தான் முத்திரை.

பஞ்சபூதங்களை குறிக்கும் விரல்கள் :
கட்டை விரல் - நெருப்பு ஆள்காட்டி விரல் - காற்று நடுவிரல் - ஆகாயம் மோதிர விரல் - நிலம் சுண்டு விரல் - நீர்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த ஒரு பாக்கியசாலி அளித்த பேட்டியில் நமது விரல்களின் அர்த்தங்களை பற்றி சூப்பர் ஸ்டாரிடமிருந்து தெரிந்து கொண்டதாகவும், அதை மக்களோடு பகிர்ந்துக்கொள்வதாகவும் கூறினார். அது.

சுண்டு விரல் - பெண் ஆசை - திருமண விபவத்தில் மணமகனின் சுண்டு விரலையும், மணமகளின் சுண்டு விரலையும் தானே இணைக்கிறார்கள்.

மோதிர விரல் - பொன் ஆசை - பெயரிலேயே உள்ளது - அதில் தானே தங்க ஆபரணங்கள் அணிகிறோம்.


நடுவிரல் - மண் ஆசை


ஆள்காட்டி விரல் - ஆன்மா - ஒருவரை (ஆன்மாவை) சுட்டிக்காட்ட பயன்படுத்தும் விரல்.

கட்டை விரல் - பரம்பொருள் - எந்த விரல் இல்லையென்றாலும் நம்மால் வேளை செய்துவிடமுடியும், ஆனால் கட்டை விரல் இல்லையென்றால், நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்து விடமுடியாது.


இப்படி இந்த மூன்று ஆசைகளையும் வெறுத்து, ஆன்மாவை பரம்பொருளோடு இணைப்பதன் மூலம் மூக்தி அடையலாம். உதாரணம், தவம் அல்லது தியானம் செய்யும் பொழுது அவர்கள் உபயோகிக்கும் முத்திரை.



ஆக, நம் உடல் ஆரோக்கியம் ஆகட்டும், ஆன்ம ஆரோக்கியம் ஆகட்டும், அதை நாமே நிவர்த்தி செய்துக்கொள்ளலாம். உதாரணமாக, தலைவலியைக்கூட நம் விரல்களை அதற்கேற்றார் போல் இணைப்பதன் மூலம் எந்த மருந்து, மாத்திரைகள் இல்லாமல் போக்கலாம்.

அது எப்படி சாத்தியம்?............. அடுத்து பதிவில் பார்ப்போம்

நன்றி
- கணேஷ்.எஸ்.என்.

No comments:

Post a Comment