Thursday, September 10, 2009

ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

நமது சூப்பர் ஸ்டார் சமீபத்தில் கலந்து கொண்டு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைநட்சத்திரங்களையே குதுகுலப்படுத்திய நிகழ்வுகள், 1) நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நாடக விழாவையும், 2) 80களின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெற்ற மலரும் நினைவுகள் நிகழ்வும்தான் இப்போழுது கலைஞர் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்பெஷல் டீரீட்.

dsc_0632

இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியைப்பற்றி சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகிகளைத் தொடர்புக் கொண்டு நாம் விசாரித்தபோது அவர்கள் கூறிய விவரங்கள் உங்களுக்காக…

முதலில், கலைஞர் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் டைமண்ட் பாபு அவர்களை தொடர்புக்கொண்ட போது, “நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நாடக விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியையும், அதில் பங்கேற்ற சூப்பர் ஸ்டாரின் சிறப்புரையையும் தொகுத்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக விரைவில் கலைஞர் டி.வியில் ஒளிப்பரப்பவிருக்கிறோம். இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ஆற்றிய உரை சமீபத்தில் அவர் நிகழ்த்திய உரைகளில் குறிப்பிடத்தக்கதாகும். திரை கலைஞர்களே சூப்பர் ஸ்டாரின் பேச்சில் ஆர்ப்பணித்தனர் என்றால், ரசிகர்களுக்கு கேட்கவா வேண்டும்!” என்றார்.

அடுத்து, ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜேக்கப்புடன் பேசினோம்.

“1980களின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட கெட்-டு-கெதர் நிகழ்ச்சி ஜெயா டி.வி.யின் சார்பாக நான்கு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வருகைதான். ஆரம்பத்திலேயே வந்துவிட்ட அவர், அனைவருடனும் உற்சாகமாக பழைய நினைவுகளை பேசி, மிக ரிலாக்ஸ்டாக இருந்தார்.

ss-party

அவர் இத்தனை சகஜமாக தங்களுடன் இருப்பார் என பல கலைஞர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நிகழ்ச்சி முடியும் வரை அந்த உற்சாகம் குறையாமல் நீடித்ததற்கு காரணம் ரஜினி சார்தான். இந்த நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள்…”, என்றார்.

‘இலையா… சூரியனா’ என்பதல்ல இப்போது முக்கியம்… இரண்டு நிகழ்ச்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நாளில் வராமல் இருக்க வேண்டுமே!

- ரஜினி ராஜேஷ்

No comments:

Post a Comment