Monday, July 13, 2009

சூப்பர் ஸ்டாரை லைட்மேன் முதல் தயாரிப்பாளர் வரை பெருமையாக கருதுவது ஏன்?


சூப்பர் ஸ்டாரை லைட்மேன் முதல் தயாரிப்பாளர் வரை பெருமையாக கருதுவது ஏன்?

திரையுலகில் சூப்பர் ஸ்டாரை லைட்மேன் முதல் தயாரிப்பாளர்கள் வரை பெருமையாக கருதுவது ஏன் தெரியுமா... தன்னை எந்த நிலையிலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக நினைத்து நடந்து கொள்ளாததே.

தலைவர் மக்களுடன், ரசிகர்களுடன் பழகும் விதம், அவரின் எளிமை, அவரின் ஆன்மீக சிந்தனை மற்றும் தொலைநோக்கும் திறன் உலகம் அறிந்தது.

தனது தொழிலை நேசிப்பதும் கடவுளை வணங்குவதும் ஒன்றே என்ற உயர்ந்த தத்துவத்தை திரையுலகில் தனது முன்னோடிகளிடமிருந்து கற்றுக் கொண்ட தலைவர், இன்று அதை தனக்கு அடுத்த நிலையில் உள்ள பலருக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார். சிலர் அவருடன் பழகி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்... இன்னும் சிலரோ அவரைப் பார்த்தே கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு சூழலில் பல்வேறு தரப்பினர் நமது சூப்பர் ஸ்டாரை பற்றி பெருமையுடன் நினைவு கூர்ந்ததை இங்கே ஒரு தொகுப்பாகத் தந்துள்ளோம். ரசிக நண்பர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியும் என்றாலும், மீண்டும் ஒரு நினைவு கூறலாக இதைப் படிக்கவும்.

சூப்பர் ஸ்டார் தான் நட்பு பாராட்டும் நண்பர்களையும், திரையுலகில் தான் மதிக்கும் சீனியர் நடிகர்களையும் தன்னுடைய எல்லா திரைப்படங்களிலும் நடிக்க வைப்பார். அமரர்கள் அசோகன், தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, ஜெய்சங்கர், இப்போதுள்ளவர்களில் விஜயகுமார் மற்றும் நடிகை மனோரமா என்று இந்த பட்டியல் பெரியது.

இவர்கள் அனைவருமே ரஜினியை தங்களின் பாசத்துக்குரிய குடும்ப உறுப்பினராகவே கருதியவர்கள் (மனோரமா ஒருவரைத் தவிர). குறிப்பாக தேங்காய் சீனிவாசன் ரஜினி குறித்து மிக உயர்வாகப் பேசுவார். எண்பதுகளிலேயே, புரட்சித் தலைவருக்கு அடுத்த ஒரு சிறந்த மனிதன் ரஜினிதான் என்று வெளிப்படையாகச் சொன்னவர் தேங்காய் சீனிவாசன்.

பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான கே. பாலாஜி அவர்கள், அமரராவதற்கு சில தினங்கள் முன்பு ஜெயா தொலைக்காட்சியில் ரஜினியைப் பற்றி இவ்வாறு கூறினார்:

முன்பெல்லாம் தயாரிப்பாளர்களை கண்டால், நடிகர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். இன்றோ, நடிகர்களை பார்த்து தயாரிப்பாளர்கள் எழுந்து மரியாதை செய்கிறார்கள். ஆனால், திரு. ரஜினி அவர்கள் அன்று முதல் இன்று வரை அவர் திரையுலகில் பர்பெக்ட் ஜென்டில்மேனாக நடந்து கொள்கிறார். தனது முன்னோடிகள், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் அவர் காட்டும் மரியாதையும் மதிப்பும் கொஞ்சமும் மாறவில்லை. அதனால் தான் அவர் அந்த உயரத்தில் உள்ளார், என்றார்.

நமது இயக்குனர், ரஜினி ரசிகர்கள் சமூகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் என்ற பெருமைக்குரியஎஸ்.பி.முத்துராமன் இதே ஜெயா தொலைக்காட்சியில் தன் திரையுலக நினைவுகளைப் பகிரந்து கொண்டார்.

அப்போது அவர் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி, ரஜினியின் எளிமைக்கும் சினிசியாரிட்டிக்கும் உதாரணம்:

நான் இயக்கிய சுமார் 75 படங்களில், 25 திரைப்படங்கள் சூப்பர் ஸ்டார் நடித்ததே. அதில் ஒரு சில திரைப்படங்கள் ஹிட். மற்ற அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதில் ஒன்று 'குரு சிஷ்யன்'.

அந்த திரைப்பட படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்... படத்துக்கு ரஜினி சார் ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்து இருந்தார்.

அந்த சமயத்தில் நடிகை சீதா பிஸியாக இருந்ததால், அவரும் பிரபு அவர்களும் இணைந்து நடிக்க வேண்டிய பாடல் காட்சி ஒன்று இருந்தது. அந்த பாடல் காட்சியை படமாக்கினால், ரஜினி சாருக்கு அன்று படப்பிடிப்பு இல்லை. எனவே, சூப்பர் ஸ்டாரிடம் சென்று நிலைமை எடுத்து கூறி நீங்கள் ஒருநாள் வேண்டுமானால், சென்னைக்கு சென்று வாருங்கள் என்று கூறினோம்.

நான் உங்களுக்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளேன். அது முடிவடையாமால், இங்கே இருந்து போகமாட்டேன், நீங்கள் தாரளாமாக அந்த பாடல் காட்சியை பதிவு செய்யுங்கள் என்றார்.

"சரி, நீங்க ஒரு நாள் ஓட்டலிலாவது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நான் அந்த பாடல் காட்சியை படமாக்கிவிடுகிறேன்", என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படபிடிப்பு தளத்திற்குள் வந்து விட்டார்.

ஏன்? என்று கேட்டேன்.

"இன்று முழுவதும் நான் உங்கள் உதவியாளர். நீங்கள் படப்பிடிப்பை ஆரம்பியுங்கள்", என்று சொல்லிவிட்டார். சொன்னதுடன் நில்லாமல் அன்று நாள் முழுதும் லைட்மேனாக, உதவியாளராக, ட்ராலியை தள்ளிக்கொண்டு ஒரே ஜாலியாக எங்களுடன் அவர் இருந்தது மறக்க முடியாதது," என்றார்.

இது நடிகர் நிழல்கள் ரவி சொன்ன ஒரு சம்பவம்:

ஒரு நிகழ்ச்சியில் நிழல்கள் ரவியிடம் ஒரு மூன்று புகைப்படங்களைக் கொடுத்து, அந்தப் படங்களில் உள்ளவர்களுடன் ரவிக்கு ஏற்ப்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து பேசச் சொன்னார்கள்.

மூன்றில் ஒன்று சூப்பர் ஸ்டார் புகைப்படம். அதை பார்த்த மாத்திரத்தில், "Wow, he is my best friend, well wisher too!" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "நான் திரையுலகில் முன்னேறிக்கொண்டு இருந்த சமயத்தில் அடிக்கடி தாஜ், சோழா போன்ற ஓட்டல்களுக்கு அடிக்கடி செல்வேன்.

அப்போது ஒரு முறை ரஜினி சார் என்னைப் பார்த்துவிட்டார். உடனே அழைத்து, 'என்ன ரவி எப்படி இருக்கீங்க, எப்படி தொழில் நடக்குது, இப்படியே போய்ட்டு இருந்தா எப்படி?' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

உடனே, 'என்ன.. வீடு, வாகனம் எல்லாம் வாங்கிட்டீங்களா?' என்றார்.

நான் 'இன்னும் இல்லை' என்றேன். உடனே அவர், 'முதலில் வீடு, வாகனங்கள் வாங்கிடணும். அப்புறமா இப்படி வாழ்க்கையை ஆனந்தமாக கழிக்கலாம்...' என்றார்.

அதற்கு பிறகுதான் நான் வீடு, வாகனம் எல்லாம் வாங்கி லைப்ல செட்டிலானேன்," என்றார்.

உடனிருப்பவர்களும் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்புபவர் சூப்பர் ஸ்டார். தன்னால் முடிந்தவரை அதற்கு உதவியும் செய்பவர்.

தலைவரின் இந்த குணம் அறிந்துதான் அமரர் வி.கே.ஆர் அவர்கள், சூப்பர் ஸ்டாரின் புகைப்படத்தை தன் பூஜை அறையில் வைத்து போற்றினார்.

மேடை நாகரிகமின்றி இன்னா செய்த மனோரமாவுக்கும் நன்மை செய்து நாண வைத்த பெருந்தகை சூப்பர் ஸ்டார்.

மேலும், வெற்றி தோல்வி இரண்டையும் ஒன்றாக பார்க்கும் அகண்ட பார்வை கொண்டவர் நமது சூப்பர் ஸ்டார். அதனால்தான் தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக பாபா திரைப்படத்தால் நஷ்டம் என்ற பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக, அதை ஈடுசெய்ய பணத்தை லாபத்துடன் திருப்பித் தந்தவர். இன்றைய தேதிக்கு பாபாவால் எல்லோரும் லாபம்தான் பெற்றார்களே தவிர, நயா பைசா நஷ்டம் அடையவில்லை.

ரசிகர்களையும் தாண்டி ரஜினியை ஏன் அனைவருக்கும பிடிக்கிறது தெரியுமா... அவர் அரைவேக்காடுகளின் விமர்சனங்களைக் கண்டுக்கொள்வதுமில்லை, சுயநலமிகள் சிலரது புகழ்மொழிக்கு மயங்குவதும் கிடையாது.

விருது, பாராட்டு விழா போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர். 'பணம், புகழ் இதெல்லாம் வந்தாலும் சரி, போனாலும் சரி ஏன்னு கேட்க முடியாது' என தனது அனுபவத்தையே பாடமாக சொன்னவர் அல்லவா..!

அதனால்தான் இன்றும் நிறைகுடமாய், எல்லாம் அறிந்தும் எதுவும் தெரியாத பாவனை காட்டும் ஞானியாய், ரசிகர்கள், இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டியாய் திகழ்கிறார் தலைவர்.

நன்றி
ரஜினி ராஜேஷ்.


36 comments:

  1. வலையுலகுக்கு வருக... வாழ்த்துக்கள் ராஜேஷ்!

    வினோ
    என்வழி.காம்

    ReplyDelete
  2. i know that you will be great at whatever you do,because superstar fans are intelligence,hardworker,self belief...
    congratulations ...
    i wish the best for you and our superstar the magnet blogspots...

    ReplyDelete
  3. வாங்க ராஜேஷ்! வாழ்த்துகள்!!! தொடர்ந்து எழுதுங்க.. (Please remove word verification)

    ReplyDelete
  4. Hi Rajesh

    Congratulations.

    Good post...

    Kamesh

    ReplyDelete
  5. Welcome to the WEB WORLD Rajesh.

    My hearty congratulations to you.......


    Come to my blogspot - www.jokkiri.blogspot.com for a write-up on Super Star Rajinikanth.

    ReplyDelete
  6. Hi Rajesh,

    Congrats.......Keep Going...All The Best

    ReplyDelete
  7. Dear Rajesh! Congratulation.. we really appreciate your effort. Keep up the good work. All the best..

    Regards
    Jerome

    ReplyDelete
  8. Hi,
    This article is like a salute to our Thalaivar in his own way(oru kannai adichikittu salute).Nice one Rajesh. Keep it up.
    Thanks,
    Karthik.T.

    ReplyDelete
  9. hats off rajini rajarishi sir
    thaliver is the only one can lead the future,thanking you for making good things for good people , john royal chennai

    ReplyDelete
  10. Hi Rajini Rajesh,

    all the best for ur new blog......i wish god to give u all the mental power to continue this wonderful journey with ease.....many of our thalaivar's fans and myself will be with u.....go on

    ReplyDelete
  11. superb article and gr8 observation abt thalaivar... kalakunga rajesh

    ReplyDelete
  12. Hi Rajesh,

    I saw the program in which Nizhalgal Ravi mentioned what you have given in the blog. It was a pretty good advice and certainly one has to be very bold to give such kind of an advice. SS is very bold and straight.

    Nice post and keep going.

    Regards,
    Chandrasekar

    ReplyDelete
  13. Vazhthukkal Rajesh. All the best ...

    Endrum anbudan,
    Shivaji

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ராஜேஷ் :-)

    ReplyDelete
  15. Welcome Rajesh. Please write only about Rajini - dont involve in pulling down others, which is not Rajini fans intention

    ReplyDelete
  16. Vazhtukkal! Keep it going! Write more about his current doings and present events...

    1 of the well wisher from millions

    ReplyDelete
  17. My hearty congratulations to Mr. Rajesh for his new efforts.....

    ReplyDelete
  18. பரதேசிகளா உங்களிக்கு வேற வேளை இல்லை.?
    போய் உங்கள் வேலைகளை பருங்கட நாய்களா.

    ReplyDelete
  19. Hai Rajesh

    Welcome. nice post. Keep it up

    ReplyDelete
  20. DEAR RAJESH
    VALTHUKKAL.
    ANBUDAN E.P.R.MADURAI

    ReplyDelete
  21. congrats rajini rajesh.god will never let down the persons who are supporting good human being like our thalaivar.best of luck for your future writings.

    ReplyDelete
  22. to bala
    pancha paradesi,theru nai ippadi innum pala varthaigalil unnai yennal thitta mudiyum.aanal visayam illamal thannai parthu kuraipavarai yengal thalaivar kuraikkum inamagave ninaithu vittuviduvar.athupolave nangalum unnai vidugirom.
    ithu pola thalaivar pugal padum bloggugal innum niraiye varum.athanal ippoluthe ulcerukku yenna mathirai yendru therinthu vaithu kollavum.

    ReplyDelete
  23. நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள் ரஜினி ராஜேஷ்.

    ReplyDelete
  24. congrats rajesh "our dreem comes true"

    ReplyDelete
  25. rajesh, Hats off....

    kalakkunga

    (tamilla paste panna mudyaleye)

    ReplyDelete
  26. Dear Rajesh,

    Congrats. Keep it up.

    S Venkatesan
    Nigeria

    ReplyDelete
  27. Hi Rajesh,

    Nice Article.. All the Best..


    Anand

    ReplyDelete
  28. Saravanan from Dubai
    I too big fan of Rajinikanth. I used to watch all his moives at first day, first show.Sometime I succeeded, Sometime I didn't.Really he has some magnet to attract the people. It may be because of his simplicity. Best wishes to you Mr Rajesh.

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் ராஜேஷ் :)

    ReplyDelete
  30. super star valka palaandu

    hello rajesh super
    by
    mohanraj
    9843440494
    madurai

    ReplyDelete
  31. Bala,
    Punnakku, onnalkku enna velainnu inge vanthu padichuttu, comment pottruke, muthalle nama olungannu paarudi

    ReplyDelete