Friday, August 28, 2009

சுதந்திர தினம்… ரத்ததானம் செய்த சேலம் ரஜினி ரசிகர்கள்!

ரத்த தானம் செய்து சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சேலம் ரஜினி ரசிகர்கள்

சேலம்: ரஜினியின் படம் வெளியாகும் போதுதான் என்றில்லாம், ஒவ்வொரு சிறப்பு நாளிலும் ரஜினி ரசிகர்கள் நற்பணிகள் செய்வது இன்றைக்கு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

12-copy

குறிப்பாக இந்தப் பணிகளை அவர்கள் மேற்கொள்ளும் விதம் ரஜினியே பெருமைப்படும் அளவுக்கு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது என்றால் மிகையல்ல.

சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் தொடர்ந்து பொதுமக்களுக்குப் பயனுள்ள பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

சேலம் பொன்னம்மாபேட்டை படையப்பா ரஜினி ரசிகர் மன்றத்தினர் கடந்த மூன்றாண்டுகளாக இந்திய சுதந்திர தினத்தன்று ரத்ததானம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் ரத்த தான நிகழ்ச்சி நடந்தது.

உன்னதமான தலைவர்கள் பலர் ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை தம் ரத்தம் கொடுத்தாவது பேணிக் காப்போம்என்ற கருத்தை வலியுறுத்தவே இந்த நிகழ்ச்சி என பெருமையுடன் காரணம் கூறுகின்றனர் இந்த ரசிகர்கள்.

13-copy

சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றத் தலைவர் பழனிவேல் துவக்கி வைத்தார்.

படையப்பா ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் தனபால், மண்டலப் பொறுப்பாளர் துளசிராம், அஸ்தம்பட்டி மண்டலப் பொறுப்பாளற் கனகராஜ், தளபதி ராம், ரமேஷ் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

12

50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்தனர்.

குறிப்பு: முதல் படத்தில் நீங்கள் பார்க்கும் உடல் ஊனமுற்ற ரசிகர் அமர்ந்திருக்கும் வாகனத்தை அவருக்கு வாங்கித் தந்தவர்கள் படையப்பா ரஜினி ரசிகர் மன்றத்தினர்தான். ஒரு முன்னோட்ட அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளனர். மேலும் சிலருக்கு இதுபோன்ற வாகனங்களை வாங்கித் தரவும் முடிவு செய்துள்ளனர்.

- பா.அருள், சேலம்
&
- என்வழி.காம்

1 comment:

  1. Thalaivan Vazhiyil "Kai Kodukkum Kai"
    Thodarattum...Nalla Panigal...Thanks to All Rajini Fans

    ReplyDelete